செயற்கை அறிவு vs இயற்கை அறிவு
by Vijayakumar Mayilsamy, WebCoder
செயற்கை அறிவு மற்றும் இயற்கை அறிவு — ஒரு ஆழமான ஒப்பீடு

தரவு என்பது ஒழுங்கற்ற, ஒழுங்கமைக்கப்படாத உண்மைகளின் தொகுப்பு.
தகவல்கள் என்பது தரவுகளை ஒழுங்கமைத்து பொருள் கொடுக்கும் வகையில் மாற்றப்பட்ட வடிவம்.
அறிவு என்பது தகவல்களை ஆய்வு செய்து புரிந்துகொள்வது.
மெய்யறிவு என்பது அறிவின் மூலம் கிடைக்கும் சுய சிந்தனை, தனித்துவமான பொருள் மற்றும் வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல்.
அறிவின் வகைகள்
அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை கீழ்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்:
- இயற்கையறிவு
- உணர்வறிவு
- படிப்பறிவு
- பட்டறிவு
- கல்வியறிவு
- தொழில்சார் அறிவு
- துறைச்சார் அறிவு
- அனுபவ அறிவு
- பொது அறிவு
- ஆள்மனப்பதிவறிவு
புரிதல் என்றால் என்ன?
புரிதல் என்பது ஒரு கருத்து, செய்தி அல்லது சூழ்நிலையை ஒருவர் தெளிவாகப் புரிந்துகொள்வது.
இது ஒரு அறிவாற்றல் செயல்முறை ஆகும்.
சுய விழிப்புணர்வு
சுய விழிப்புணர்வு என்பது:
- உணர்ச்சிப் புரிதல்
- வளர்ச்சி மனப்பான்மை
- நேர்மறையான சுய-இமேஜ்
சுய அறிவு: ஒருவரின் மன நிலைகள் மற்றும் செயல்முறைகள் பற்றிய அறிவு.
சுய சிந்தனை: ஒருவரின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களைப் பற்றி சிந்திக்கும் செயல்முறை.
விரிவான விளக்கம்
தரவு (Data)
- ஒழுங்கற்ற உண்மைகளின் தொகுப்பு.
- எண்கள், எழுத்துக்கள், குறியீடுகள்.
- தனியாகப் பார்த்தால் அர்த்தமில்லாதவை.
தகவல் (Information)
- தரவுகள் + அமைப்பு = தகவல்.
- உதாரணம்: தேர்வு மதிப்பெண்கள் -> அறிக்கையாக மாற்றம்.
அறிவு (Knowledge)
- தகவல்களைப் புரிந்து செயல்படுதல்.
- உதாரணம்: நோயின் அறிகுறிகளைப் புரிந்து எடுத்து தீர்வு காண்பது.
மெய்யறிவு (Wisdom)
- வாழ்க்கையின் ஆழமான புரிதல்.
- உதாரணம்: நோயாளிக்கு பரிதாபத்துடன் நடந்து கொள்வது.
செயற்கை நுண்ணறிவு (AI)
- கணினி மனிதரைப் போல் கற்கும் திறன் பெறுவது.
- கற்றல், பகுப்பாய்வு, தீர்வு காண்பது.
ஐந்து முக்கிய வேறுபாடுகள்
கட்டமைப்பு | விளக்கம் |
---|---|
தரவு | ஒழுங்கற்ற உண்மைகள் |
தகவல் | தரவுகளுக்குப் பொருள் கொடுத்த வடிவம் |
அறிவு | தகவல்களைப் புரிந்து செயல்படுதல் |
மெய்யறிவு | வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்ளும் அறிவு |
AI | தரவின் அடிப்படையில் பதில் தரும் செயற்கை நுண்ணறிவு |
சுயபரிசோதனை என்றால் என்ன?
- ஒருவரின் எண்ணங்கள், உணர்வுகள், செயல்களைப் பற்றி சிந்தித்து நுண்ணறிவு பெறும் செயல்முறை.
சுய சிந்தனையின் நன்மைகள்
- சுய விழிப்புணர்வு அதிகரிப்பு
- முடிவெடுக்கும் திறன் மேம்பாடு
- உணர்ச்சி நுண்ணறிவு
- மன அழுத்தம் குறைப்பு
- தெளிவு
- தனிப்பட்ட வளர்ச்சி
- உறவுகள் மேம்பாடு
- படைப்பாற்றல் அதிகரிப்பு
- சிக்கல் தீர்க்கும் திறன்
- ஆரோக்கிய நல்வாழ்வு